க.பொ.த. சாதாரண தரத்தில் 9A சாதனை படைத்த மாணவருக்கு: இல்லத்திற்கே சென்று வை.எம்.எம்.ஏ கௌரவிப்பு.!!!
-கே.ஏ.ஹமீட்-
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9A தரச் சித்தியைப் பெற்று (English Medium) சாதனை படைத்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் முகம்மது றுமைஸ் அன்சீப் அஹமட் இல்லத்திற்கு நைற்று (26) மாலை நேரில் சென்று YMMA அட்டாளைச்சேனை அமைப்பினர் குறித்த மாணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவித்தனர்.
முகம்மது றுமைஸ் அன்சீப் அஹமட்டின் தந்தை அப்துல் ரஹ்மான் முகம்மது றுமைஸ் அவர்கள் YMMA
அட்டாளைச்சேனையின் உபதலைவர்களில் ஒருவராக இருந்து பல்வேறுபட்ட
சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது வை.எம்.எம்.ஏ.
அட்டாளைச்சேனையின் தலைவர்
பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம் தலைமை யில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA
பேரவையின் அம்பாறை மாவட்டப்
பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் MIM.றியாஸ், அட்டாளைச்சேனை
YMMA ஆலோசகர் சமூக செயற்பாட்டாளர்
அன்வர் நௌஷாட் (றிம்ஸி), YMMA
அட்டாளைச்சேனை பொருளாளர் ஓய்வு நிலை ஆசிரியர் AM.சுலைமாலெப்பை ஆகியோர்களால் இக்கௌரவம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் YMMA அட்டாளைச்சேனை
செயலாளர் UL.ஹம்மாது, கல்வி பிரிவின் செயலாளர் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ். எம்.நஸீர்,மாணவரின் தந்தை ஏ.ஆர்.எம். றுமைஸ் மற்றும் றுமைஸ் அவர்களின் தந்தை அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டனர்.



