இலங்கையில் இறக்குமதி வாகனங்களின் விலைகள் உயர்வு: சந்தையில் நுகர்வோருக்கு தாக்கம்.!!!
இலங்கையில் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 ஆம் தேதி முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 1.25 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதையடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வாகன இறக்குமதி செலவுகள் அதிகரித்து, தற்போது நுகர்வோர் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மத்திய கிழக்கு பிராந்திய புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் சர்வதேச சந்தை விலையேற்றம் காரணமாக வாகனங்களின் மதிப்பீடுகள் மாற்றமடைந்துள்ள நிலையில், இந்த வரி உயர்வு நுகர்வோர் தேவைக்கும் சந்தை நிலைக்கும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.