வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்; மதிலை உடைத்து வளவுக்குள் பாய்ந்தது.!!!
மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (05) இடம்பெற்ற கார் விபத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வளவுக்குள் புகுந்து மதிலை உடைத்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் தாக்கத்தால் மதிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் உயிர்ச் சேதமோ, பாரிய காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

