மூத்த குடிமக்களுக்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை வங்கிக் கணக்குகளில் வரவு.!!!
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான “அஸ்வெசும்” நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை (03) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மொத்தம் 697,900 பயனாளிகளுக்கு 3,489,500,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் 3,108,805,000 ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், மேலும் 76,139 பயனாளிகளின் அஸ்வெசும் வங்கிக் கணக்குகளில் 380,695,000 ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.
இந்த கொடுப்பனவுகள் திட்டமிட்டபடி நாளை (03) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.