உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

வெள்ள சேதத்துக்குப் பின்; கிழக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.!!!

■ 18 நாட்களுக்குப் பின்னர் ரயில் இயக்கம் – பழுதுபார்ப்பு பணிகள் வேகமாக முன்னேற்றம்.

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களை பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 18 நாட்களுக்குப் பின்னர் நேற்று (16) காலை முதல் கிழக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, பிரீமா மாவு (Prima Flour) ஏற்றப்பட்ட சரக்கு ரயில் சீனக்குடாவிலிருந்து சீதுவ வரையிலான பயணத்தை நேற்று தொடங்கியது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி கிழக்கு ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தினால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்குப் பின் இயக்கப்பட்ட முதலாவது ரயில் இதுவாகும்.

இதேவேளை, கிழக்கு ரயில் பாதையில் மகாவத்திலிருந்து கல்-ஓயா வழியாக மட்டக்களப்பு வரையிலான சேதமடைந்த பிரிவில், கல்லெல்ல – மனம்பிட்டிய இடையேயான பழுதுபார்ப்பு பணிகள் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக ரயில்வே துறையின் கண்காணிப்பாளர் பொறியாளர் (கிழக்கு) நிசால் லியனாராச்சி தெரிவித்தார்.

கல்லெல்லவிலிருந்து மனம்பிட்டிய வரையிலான சேதமடைந்த ரயில் பாதை பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரிவில் நேற்று (16) முதல் ரயில் சேவை இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரிப்பு மற்றும் சேதம் ஏற்பட்ட பகுதிகளை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884506

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time