கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். ராபி நியமனம்.!!!
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக, தற்போது கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் ஏ.ரி.எம். ராபி இன்று (15) காலை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் இன்று காலை வழங்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் பதில் உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில், நிரந்தர உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். ராபி அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கிழக்கு மாகாண உள்ளுராட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு புதிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.