உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். ராபி நியமனம்.!!!

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக, தற்போது கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் ஏ.ரி.எம். ராபி இன்று (15) காலை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் இன்று காலை வழங்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் பதில் உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில், நிரந்தர உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். ராபி அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கிழக்கு மாகாண உள்ளுராட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு புதிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 883664

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time