வாக்காளர் இடாப்பு 2026: உரிமைக்கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கு ஜூன் 5 வரை அவகாசம்.!!!
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, வாக்காளர் இடாப்பின் ஆரம்ப வரைவு தற்போது மக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமது பெயர்கள் மற்றும் விபரங்கள் இடாப்பில் உள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சென்று சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பினைப் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர் இடாப்பில் பெயர்கள் விடுபட்டிருப்பின் அல்லது தகவல்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.