கால்வாயில் விழுந்த யானை மீட்பு நடவடிக்கைக்கு பின் ஆவேசம் – வனஜீவ வாகனங்கள் சேதம்.!!!
அரலகங்வில – சிறப்பு செய்தி
அரலகங்வில – பிம்புரத்தாவ பகுதியில் இன்று (17) அதிகாலை மாதுரு ஓயா ZD கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்கும் அவசர நடவடிக்கையை வனஜீவ பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டனர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு மடகம பகுதியில் அந்த யானையை பாதுகாப்பாக நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் நிலத்துக்கு வந்ததும், அந்த யானை திடீரென ஆவேசமடைந்து வனஜீவ கேப் வாகனம் ஒன்றையும், நான்கு மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த காட்டு யானை அங்கிருந்து தப்பிச் சென்றதாக வனஜீவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு மீட்பு நடவடிக்கைகளில் இவ்வாறான ஆபத்தான நிலைகள் தொடர்ச்சியாக ஏற்படுவது குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


