இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’ கொழும்பு துறைமுகம் வருகை.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளின்படி மரியாதையுடன் வரவேற்றது.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ‘INS SINDHUKESARI’ கப்பலின் குழுவினர், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், அவர்கள் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருகை, இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








