இத்தாலிய கடற்படைக் கப்பல் “ITS GIOVANNI DELLE BANDE NERE” இலங்கை விஜயத்தை முடித்து புறப்பட்டது.!!!
–கற்பிட்டி எம்.ஹெச்.எம். சியாஜ்–
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வியாழக்கிழமை (21) இலங்கையை வந்தடைந்தது. அதன் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (22) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபுப்படி குறித்த கப்பலுக்கு சிறப்பு வழியனுப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் அன்டோனியோ புபிஸ் (Antonio BUFIS) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










