கண்டி தேசிய வைத்தியசாலையில்: ரூ.425 மில்லியன் மதிப்பில் நவீன மருத்துவ இயந்திரங்கள்.!!!
சுகாதார சேவையின் பௌதீக வளங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டி தேசிய மருத்துவமனைக்கு ரூ. 425 மில்லியன் செலவில் வழங்கப்பட்ட இரண்டு உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன.
அதன்படி, எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி Extracorporeal Shock Wave Lithotripsy (ESWL) இயந்திரம் மற்றும் டிஜிட்டல் சப்ராக்ஷன் ஆஞ்சியோகிராபி Digital Subtraction Angiography இயந்திரம் ஆகியவை இந்த வாரம் முதல் பயன்படுத்தப்பட உள்ளன.
ரூ. 208 மில்லியன் மதிப்புள்ள எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி Extracorporeal Shock Wave Lithotripsy (ESWL) இயந்திரம், அறுவை சிகிச்சை அல்லது பிற ஊடுருவும் சிகிச்சை முறைகளுக்கு உட்படாமல், சிறுநீர் அமைப்பில் உள்ள கற்களை மீயொலி அலைகளைப் பயன்படுத்தி சிறு துண்டுகளாக உடைத்து சிறுநீருடன் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
முந்தைய இயந்திரத்தின் பழுது காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ESWL சிகிச்சையானது, இப்போது கண்டி தேசிய மருத்துவமனை சிறுநீரகவியல் பிரிவில் சிறந்த வினைத்திறனுடன் செய்யப்படவுள்ளது.


