அரச நிறுவனங்களில் பணியாற்றும்: 9800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சரவை அங்கீகாரம்.!!!
அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் நீண்டகாலமாக நிரந்தர நியமனங்கள் இன்றி பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த ஊழியர்களை நிரந்தரமாக இணைக்கும் வகையில் தேவையான வழிகாட்டுதல்களுடன் கூடிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவு அரச சேவையில் பணியாற்றும் பலருக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய தீர்மானமாகக் கருதப்படுகிறது.