ஜனாதிபதி அநுரகுமார – முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுடன் அவசர சந்திப்பு.!!!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கையில் பணியாற்றும் அரபு நாடுகளின் தூதர்களுக்கிடையிலான முக்கியமான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
உலகளாவிய அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சர்வதேச உறவுகள் மற்றும் பிராந்திய அமைதி குறித்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக, அப்பகுதியில் அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது இலங்கையின் உறுதியான விருப்பம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், எந்தவொரு போரிலும் நேரடியாக ஈடுபடாத நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கும், உலக ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிப்பவை எனக் கவலை வெளியிட்டார்.
அத்துடன், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில், இலங்கையர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதில், மற்றும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தில் அரபு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என அவர் பாராட்டினார்.
இந்த சந்திப்பு, இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது. உலகளாவிய பதற்ற நிலைகளுக்கு மத்தியில், அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தும் இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



