கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையம் புதுப்பிப்பு நிறைவு: 424 மில்லியன் ரூபாய் செலவில் – மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.!!!
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, இன்று மக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நவீனமயப்படுத்தும் பணிகளின் பின்னர், இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இரண்டு பஸ் தளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 424 மில்லியன் ரூபாய் செலவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததன்படி, புதிய வசதிகளுடன் கூடிய இந்த நிலையம் மூன்று மாடிகளும் மூன்று பிரிவுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில், தரைப்பகுதி முக்கிய பஸ் நிலையமாகவும், இரண்டாம் மாடி சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகளாகவும், மூன்றாம் மாடி நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிப்பு மூலம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சிறந்த மற்றும் சௌகரியமான சேவைகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.













