அதிவேக நெடுஞ்சாலைகளில் 3 நாட்களில் ரூ.163 மில்லியன் வருமானம்.!!!
கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்களின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை ரூ.163,291,065 வருமானத்தைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று நாட்களுக்குள் மொத்தமாக 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகளவான வாகனப் போக்குவரத்தும் அதிக வருமானமும் ஏப்ரல் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் மட்டும் 161,847 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அதன்மூலம் ரூ.59,815,450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.