உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

“சமூக சக்தி” தேசிய திட்ட முன்னேற்றம் குறித்து: ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு.!!!

கிராமப்புற வறுமையை ஒழித்து கிராமிய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் இதுவரை காணப்பட்ட முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தின் போது, “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்து வரும் நன்மைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் இத்திட்டம் எவ்வளவு அளவில் பங்களித்து வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

மேலும், இத்திட்டத்தின் முன்னேற்றத்தையும் அதன் பயன்களையும் தொடர்ந்து மதிப்பீடு செய்து, கிராமப்புற மக்களுக்கு அதிகப்படியான நன்மைகளை வழங்கும் வகையில் செயல்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கிராமப்புற வறுமையை குறைத்து சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய அரசாங்கத் திட்டமாக “சமூக சக்தி” தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805410

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time