உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஷாணி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக உயர்வு: நிலுவை ஊதியம் உட்பட வழங்க தீர்ப்பாயம் உத்தரவு.!!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷாணி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானம் 2026 மே 13 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பதவி உயர்வு 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான நிலுவை ஊதியம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அதிகாரிகளில் ஒருவராக கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் பல முக்கிய மற்றும் சிக்கலான குற்றப் புலனாய்வுகளை முன்னெடுத்த அனுபவமிக்க அதிகாரியாக அறியப்படுகிறார்.

2020 ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர், சுமார் 11 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு 3/2018 சுற்றுநிருப விதிகளின் கீழ் மீண்டும் சேவையில் இணைந்த அவர், பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809354

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time