உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகள் 44 பொலிசாரினால் மீட்பு; காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கைது.!!!

(ஜே.கே)

பாரிய அளவிலான 44 தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்கா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார் .கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்பவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பெட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என தெரிய வருகின்றது. இதன்படி சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான பெற்றரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெற்றரிகளும் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ள பெற்றரிகளும் குறித்த சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 881618

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time