அமெரிக்க கடற்படையின் ‘USS CANBERRA’ கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA (LCS 30)’ என்ற போர்க்கப்பல் தனது விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெள்ளிக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS CANBERRA (LCS 30)’ கப்பல், அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய போர்க்கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஜே. மெக்லாக்லின் (J. McLaughlin) கடமையாற்றி வருகிறார்.
கப்பலின் வருகை தொடர்பான மேலதிக நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


