உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

தேசிய மக்கள் சக்தி நிதியுடன்; காங்கேயனோடையில் வடிகாண் திட்ட தொடக்க விழா.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 500 மீட்டருக்கு உட்பட்ட வடிகாண் அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (29) காங்கேயனோடை – 13 பாலம் அருகில் இடம்பெற்றது.

காங்கேயனோடை தேசிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே. அப்துல்லா, சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளாக தேசிய மக்கள் சக்தி மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எம்.சி.எம். பௌசான், எஸ்.எம். ரம்ஸீன், கே. சங்கவி, எம். களிஸ்டன் உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நீண்ட காலமாக காங்கேயனோடை மக்களை பாதித்து வரும் மழைக்கால நீர் பெருக்கு மற்றும் சுகாதார சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884718

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time