21 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு: குடா கங்கை பகுதியில் 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை.!!!
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும் மேலும் 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாயும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் தெரிவித்ததாவது, இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு இன்று (15) நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.