அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு; 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.11.56 பில்லியன்.!!!
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களுக்கு 9,241,892,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,321,735,000 ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களிலும் 1,212,457 குடும்பங்களுக்கு மொத்தம் 11,563,627,500 ரூபாய் அஸ்வெசும கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.