22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு.!!!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியவை இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எதிரணிகள் அவற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பலத்த எதிர்ப்பை வெளியிட்டதுடன், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் “ஜனநாயகத்தின் மரணத்தை” பிரதிபலிப்பதாகக் குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.
சட்டமூலங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல ஒழுங்குப் பிரச்சினைகளையும் எழுப்பினர்.
இதனால், சட்டமூலங்களைச் சமர்ப்பித்த பின்னர் நாடாளுமன்ற அமர்வில் சில நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

