வரலாற்றுச் சாதனை: ஆர்டெமிஸ்–2 நிலவுப் பயணம் வெற்றிகரமாக நிறைவு – விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பினர்.!!!
நாசாவின் (NASA) முக்கியமான ஆர்டெமிஸ்–2 (Artemis II) நிலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 10 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்த நான்கு விண்வெளி வீரர்களும் இன்று பாதுகாப்பாக பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர்.
கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரை அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த தரையிறக்கம் நடைபெற்றது. விண்வெளி வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் அனைவரும் நலமாக இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
மனித வரலாற்றிலேயே மிக அதிக தூரமான சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு அவர்கள் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.
பூமிக்குள் மீள்நுழையும் போது சுமார் 3000°F வெப்பத்தை விண்கலம் தாங்கியதுடன், பாராசூட் உதவியுடன் மெதுவாக பசிபிக் பெருங்கடலில் இறங்கியது.
இந்த வெற்றியின் மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள மனிதர்களின் நிலவிறங்கும் ஆர்டெமிஸ்–3 திட்டத்திற்கு வலுவான பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனை விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.







