இலங்கை பேரிடர் உதவிக்காக – பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா வான்பரப்பை பயன்படுத்த அனுமதி.!!!
இலங்கையில் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏந்தி வருகின்ற பாகிஸ்தான் விமானங்களுக்கு தமது வான்பரப்பை பயன்படுத்துவதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, இரு நாடுகளுக்கும் இடையில் வான்பரப்பில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் மனிதபிமான உதவிகளை கருத்திற்கொண்டு தாம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு 4 மணிநேரத்திற்குள் இந்தியா இவ்வாறு அனுமதியை வழங்கியுள்ளது.