அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க – பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து பயணம்.!!!
அரசுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து பயணமானார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில், பிரதமர் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.-403 (UL-403) என்ற விமானம் மூலம் அவர் லண்டன் நகரை நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அரசுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
தமது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த பின்னர் பிரதமர் எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

