ஆரையம்பதி பிரதான வீதியில் பயங்கர விபத்து; மின்சாரத் தூணில் மோதி முச்சக்கரவண்டி பலத்த சேதம்.!!!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் இன்று (28) முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின்சாரத் தூணில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



