மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கைத்தொலைபேசி வெடித்து 19 வயது இளைஞன் உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கைத்தொலைபேசி வெடித்ததில் 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (27.08.2026) பிற்பகல் சுமார் 5 மணியளவில் தனது வீட்டில் கைத்தொலைபேசியை மின்னேற்றத்தில் (சார்ஜ்) இணைத்திருந்த நிலையில், அதனை நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது மின்சாரம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி திடீரென வெடித்ததாகவும், இதில் இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் வாழைச்சேனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைத்தொலைபேசிகளை மின்னேற்றத்தில் வைத்திருக்கும் போது அவற்றை உடலுக்கு அருகில் வைத்து உறங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
