உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அபிவிருத்தி கலந்துரையாடல்: கட்டிடப் பணிகள் விரைவில் ஆரம்பிக்க திட்டம்.!!!

காங்கேயனோடை முகைடீன் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள றுஸ்வின் அவர்களின் நியமனம் தொடர்பாகவும்  ஆராயப்பட்டது.

மேலும், பள்ளிவாசலின் மேல்தள கட்டிடப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையுடன் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றுஸ்வின், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நப்ரீஸ், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 760233

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time