மட்டக்களப்பு காந்தி பூங்காவில்: ஈஸ்டர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு.!!!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று (21) பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஈஸ்டர் படுகொலை நினைவுத்தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி. டினேஸ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.









