உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260419-WA0042
குடி வெறியும், போதை பழக்கமும் – குடும்பங்களை நாசமாக்கும் சமூகப் பேரழிவு.!!!
Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???

Share :

மட்டக்களப்பு காந்தி பூங்காவில்: ஈஸ்டர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு.!!!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று (21) பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஈஸ்டர் படுகொலை நினைவுத்தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி. டினேஸ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 772534

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time