உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மின் கம்பியில் மின்சாரம் தாக்கி; மின்சார சபை ஊழியர்  பரிதாப பலி.!!!

போவத்த வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியதில், மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அனுருத்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி கடுமையான காயமடைந்த அனுருத்த குமார, உடனடியாக வீரபொக்குன அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.
பின்னர், அவரை குளியாபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

41 வயதான அனுருத்த குமார, 2007 ஆம் ஆண்டு தம்புள்ளை ரயில் நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு முதல் ஹெட்டிபொல ரயில் நிலையத்தைச் சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 932331

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time