உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மொறட்டுவை கடற்பரப்பில் கடற்படை படகு விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி – ஒருவர் மாயம்.!!!

மொறட்டுவை, அங்குலானை கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பல் மற்றும் கடற்பரப்பை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மற்றும் Bell 412 ரக உலங்கு வானூர்தி ஆகியன குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065672

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time