புனித ஹஜ் பயணத்திற்கு செல்லும் சிரேஷ்ட ஊடகவியலாளர் நூா்தீனுக்கு பிரியாவிடை நிகழ்வு.!!!
-எம்.ஐ.அப்துல் நஸார்-
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்வதை முன்னிட்டு அவரை வழியனுப்பி வைக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று (12) மஞ்சந்தொடுவாய் அல் பஜ்ர் பள்ளிவாயலில் போரத்தின் உப தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) அவர்களினால் பிரதான உரை நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூா்தீனின் ஏற்புரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில்ல் போரத்தின் ஆயுட்காலத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி), போரத்தின் பொருளாளர் எம்.எப்.பஸால் ஜிப்ரி, முன்னாள் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ், போரத்தின் உறுப்பினா்களான கபீர் எம்.ஹஸன், எம்.ஐ.அப்துல் மஜீட் (எப்.எம்.மஜீட்), மௌலவி என்.எம்.நௌபர் (பலாஹி), எம்.ரி.எம்.யூனுஸ், எம்.எம்.எம்.அஸீம், பீ.எம்.பயாஸ், பஹத் ஜுனைட், எம்.எஸ்.ஸாஜித், எம்.என்.எம்.றுஸ்த்ஆகியோார் கலந்துகொண்டனர்.

















