கொழும்பு – கதிர்காமம் வீதியில் பேருந்துகள் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட பலருக்கு காயம்.!!!
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் அமைந்துள்ள “மியாமி” ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலை நேரத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலையில் ஏற்பட்ட வழுக்கலான நிலைமையின்போது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பாடசாலை பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக குறித்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




