உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

அலிகார் தேசியப் பாடசாலையின் கட்டிடத் தேவைக்காக: ஏறாவூர் பொலிஸ் நிலையக் காணியை வழங்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி.!!!

-எஸ். சினீஸ் கான்-

ஏறாவூர் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அலிகார் தேசியப் பாடசாலைக்கு வழங்கப்பட்டு, ஏறாவூர் நகர சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள புதிய காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று (7) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பொறுப்பான அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபைத் தவிசாளருமான எம்.எஸ் நளீம் இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், அதற்கான அனுமதியும் பெறப்பட்டது.

அலிகார் தேசியப் பாடசாலையில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், போதுமான கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு குறித்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்குமாறு உரிய அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066761

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time