சமூக சேவைக்கான பங்களிப்பை பாராட்டி: ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு மட்டக்களப்பில் கௌரவம்.!!!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இன்று (14) கௌரவம் வழங்கப்பட்டது.
மக்களுக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருதல், உறுதியான பணிப்பற்று, சமூக நலனுக்காக மேற்கொண்ட அயராத முயற்சிகள் மற்றும் இன, மத வேறுபாடுகளை மீறிய சேவைகள் ஆகியவற்றை மதிப்பளிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் “தேசிய ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய, சமூக ஜோதி, சாதனைத் தமிழன்” உ. உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மையத்தின் உப தலைவர் “சமூக ஜோதி, தேசகீர்த்தி, தேசிய ஜோதி” எம். வை. ஆதம் மற்றும் ஊடகவியலாளர் எம். சாஜீத் ஆகியோர் இணைந்து கௌரவத்தை வழங்கினர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் இ.எம். றுஸ்வின் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
