நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வ கோழிக் குஞ்சு – மக்கள் ஆர்வத்துடன் பார்வை.!!!
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் அபூர்வமாக பிறந்த கோழிக் குஞ்சு ஒன்று தற்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி 11 கோழி முட்டைகளை அடைகாக்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் இருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மொத்தம் 9 கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் அபூர்வமாக நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த தோற்றத்துடன் ஆரோக்கியமாக காணப்படும் இந்த நான்கு கால்கள் கொண்ட அழகிய கோழிக் குஞ்சை அப்பகுதி மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இவ்வாறான அபூர்வ நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆர்வத்தையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.