திருகோணமலையில் பதற்றம்: ரயில் இயந்திரம் தீப்பற்றியது.!!!
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்ப்பட்டிருந்த ரயில் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் இன்று (08) பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
புகையிரத ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதன் காரணமாக தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ரயில் இயந்திரம் பகுதியளவில் சேதமடைந்ததோடு, எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றன.
தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை ரயில்வே திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.

