ஆபாசப் படங்களை வெளியிட்ட Facebook குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்திய 21 வயது இளைஞர் கைது.!!!
சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படும் Facebook குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த நபர் ஒருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், இன்று (27) காலை பெலியத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.