உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

நேபாள வெள்ளப் பேரழிவு; மீட்புப் பணிகளுக்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதி.!!!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை உதவத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேபாள மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த துயரமான சூழ்நிலையில், அவர்களின் வேதனையை இலங்கையும் பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேபாளத்தில் வசித்து வரும் அல்லது அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி மற்றும் தேவையான தகவல்களை வழங்கும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் 24 மணி நேர அவசர தொலைபேசி சேவையை ஏற்பாடு செய்துள்ளது.

அவசர தொடர்பு இலக்கம்:

📞 இலங்கை தூதரகம் – காத்மாண்டு:
+977 985 104 8653

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அவசர தேவைகள் ஏற்பட்டால் குறித்த தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1099270

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time