மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்: 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் 33ஆவது நினைவு தினம் இன்று (01) கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலை அமைந்துள்ள வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது தாயார் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட ரணசிங்க பிரேமதாசவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி அவரை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.




