காத்தான்குடி வாவியில்: அடையாளம் தெரியாத ஆணின் உடலம் மீட்பு.!!!
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குவைத் சிட்டி பின் ஆற்று வாவியில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) இரவு மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபரின் சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டது.
பின்னர் சடலம் மேலதிக பரிசோதனைகள் மற்றும் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
