உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கணவன்-மனைவி கைது: ரூ.7 இலட்சம் பணம் பறிமுதல்.!!!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆலிம் நகர் பகுதியில் கொமர்ஷல் க்ரடிட் வங்கிக்கு அருகிலுள்ள வீதியில் வசித்து வந்த 35 வயதுடைய கணவரும், 33 வயதுடைய மனைவியுமான இருவரும் இன்று (13) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ரூபாய் 7 இலட்சம் பணம் மற்றும் ஒரு கைப்பேசியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809011

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time