‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கணவன்-மனைவி கைது: ரூ.7 இலட்சம் பணம் பறிமுதல்.!!!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆலிம் நகர் பகுதியில் கொமர்ஷல் க்ரடிட் வங்கிக்கு அருகிலுள்ள வீதியில் வசித்து வந்த 35 வயதுடைய கணவரும், 33 வயதுடைய மனைவியுமான இருவரும் இன்று (13) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ரூபாய் 7 இலட்சம் பணம் மற்றும் ஒரு கைப்பேசியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
