அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை; நீதிமன்றத்தில் ஆஜராகாததால் உத்தரவு.!!!
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினரின் பிணையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றத்தில் தெரியவந்தது.
இதனையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.