நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு.!!!
மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இன்று (25) காலை அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.
குறித்த போதைப்பொருட்கள் புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விசேட தகன உலையில் தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற அனுமதியுடன் இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





