மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகே வாவியில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை.!!!
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் அமைந்துள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை வழமையான மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் குறித்த சடலம் சிக்கியதாகவும், பின்னர் அவர் சடலத்தை கரைக்கு கொண்டு வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.