உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260419-WA0042
குடி வெறியும், போதை பழக்கமும் – குடும்பங்களை நாசமாக்கும் சமூகப் பேரழிவு.!!!
Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???

Share :

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலம் – மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு.!!!

-பாறுக் ஷிஹான்-

தனது கோழிக் கடையை சுத்தம் செய்யும் போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி  உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை    பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் செவ்வாய்க்கிழமை (21) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன்  மின்சாரத்தினால்  தாக்கப்பட்ட நிலையில் அயலில் உள்ளவர்களினால் உடனடியாக  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில்  மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இவ்வாறு  உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இல. 202/1, மல் 13ம் வீதி, மலையடிக்கிராமம், சம்மந்துறை முகவரியைச்  சேர்ந்த  42 வயதுடைய கலந்தர் லெப்பை ரமீஸ்  என்ற  குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர்  மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில்  சம்மாந்துறை பிரதேசத்தில்  மின்சார  தாக்குதலுக்கு இலக்காகி  பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 773179

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time