கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; மின் கம்பத்துடன் மோதி விபத்து.!!!
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் தனியார் பேருந்தொன்று இன்று (12) புதன்கிழமை மாலை வீதியை விட்டு விலகி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பேருந்தில் பயணித்த சில பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளான போதிலும், பெரும் அசம்பாவிதம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதனிடையே, விபத்தைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

