வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியைவிட்டு விலகி விபத்து – மூவர் படுகாயம்.!!!
மட்டக்களப்பிலிருந்து கதுருவெலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று மனம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (16) நள்ளிரவு நேரத்தில் மட்டக்களப்பிலிருந்து கதுருவெலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கார், மனம்பிட்டி ஆச்சி சந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கார் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் காரில் பயணித்திருந்த மூவர் கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தால் குறித்த கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







