உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

தலவத்துகொடையை உலுக்கிய தீ விபத்து: மூவர் பரிதாப பலி.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

தலவத்துகொட சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (09) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கடுமையாகக் காயமடைந்திருந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உணவகத்தில் திடீரென தீ பரவியதை அடுத்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

தீ விபத்தின் போது கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூவரும் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 871017

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time